யாழில் பொலிஸார் என கூறி வீட்டில் நுழைந்து கொள்ளையடித்துச்சென்ற சந்தேக நபர்கள்!

யாழில் பொலிஸார் என கூறி விட்டில் இருந்த மூதாட்டி ஒருவருடைய தங்க சங்கிளியை சந்தேக நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ள சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூதாட்டியின் கணவர் மற்றும் பிள்ளைகள் வெளியில் சென்றவேளை வீட்டில் மூதாட்டி மற்றும் இருந்துள்ளார்.

அச்சமயத்தில் வீட்டில் நுழைந்த மூவர் அடங்கிய குழு தன்னை பொலிஸார் என கூறி அவரது கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் உள்ள தங்கச்சங்கிளியை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை முள்ளெடுத்து வருகின்றனர்.

கொள்ளைக்கார கும்பல் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும் அதன் வைத்து விசாரணைஇடம்பெறும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.