யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் இரு உயிர்களை பறித்தது!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி இரண்டு யானைகள் பலியாகியுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு ரயில் சேவைக்குத் திரும்பியது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸாரும் வனவிலங்கு திணைக்களமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.