யாழில் பாடசாலைக்கு அருகில் மாவா விற்பனை செய்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ்.சங்கானை பகுதியில் உள்ள கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் சதா போதைப்பொருள் விற்பனை செய்வதாக மானிப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பின்னர் மானிப்பாய் பொலிஸாரின் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மாவாவின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.