பேராதனை யஹலதென்ன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்!

பேராதனை யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய பெண் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்காத நிலையில், கடந்த 14ஆம் திகதி வீட்டைச் சோதனையிட்ட அயலவர்கள், வீட்டினுள் பெண்ணின் சடலம் கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

பெண் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், கடந்த 14ஆம் திகதி மாலை 06.00 மணிக்கும் மறுநாள் 09ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேரத்தான் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.