யாழில் போதைக்கு அடிமையாகி ரோட்டில் கிடந்த நபருக்கு உதவி செய்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்!

யாழில் போதைக்கு அடிமையான ஒருவர் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவு ஆகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மாணவி, குறித்த இளைஞனை முன்னர் காதலித்து வந்துள்ளார். ஹெராயின் போதைப் பொருளைத் தொடர்ந்து,

காதல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, பாதிக்கப்பட்ட மாணவி, தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்றுவிட்டு, தனது சகோதரியுடன் வீடு திரும்பினார். சந்தேக நபர் தெருவில் படுத்திருந்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது சகோதரி குறித்த நபரை தூக்கிவிட்டு வீட்டில் விட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பின்னாலையே வந்த சந்தேகநபர் ஆளில்லா கட்டடப்பகுதிக்குள் இழுத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துனள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் சகோதரி பரபரப்பான பகுதிக்கு ஓடி, கிராம மக்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்தார். எனினும், சந்தேக நபர் தப்பியோடி தலைமறைவானார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.