யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை!

கல்வி உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுடன் இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு நடவடிக்கை யாழ் கொட்டடி – பண்ணை பகுதியில் இன்று இடம்பெற்றது.

இன்றைய விழிப்புணர்வு நிகழ்வில் வித்திகாரம் உதவி நிலையத்தின் ஸ்தாபகரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவருமான கருணாகரன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகர், வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ரஜினி சௌந்தரநாயக்க மற்றும் சவுகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் கலைவாணி யாழ். மாவட்ட செய்தி அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.