யாழ்ப்பாண இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டில் கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் பாவனையால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் கல்லீரல் மற்றும் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு பல மரணங்கள் அண்மைக் காலமாக இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்காக விசேட அதிரடிப்படை ஒன்று உருவாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது.