யாழில் மாணவரை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் ! சக ஆசிரியர் எழுப்பிய கேள்வி!

யாழ்.நகரை அண்மித்த பாடசாலையொன்றில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியர் 15 வருடங்களாக இடமாற்றம் இன்றி பாடசாலையில் அமர்ந்துள்ளதாக அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பாடசாலையின் அதிபரின் ஆசியுடன் சில ஆசிரியர்கள் குறித்த ஆசிரியர்களுடன் முரண்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் 15 ஆண்டுகள் தொடர்ந்து குந்தியிருப்பது எப்படி என அதே பள்ளி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.