உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனதிபதி பிறப்பித்த உத்தரவு!

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மண்டூஸ் சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் திடீரென இறக்கின்றன.

இதன் காரணமாக பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.