யாழில் மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது புடவை சக்கரத்தில் சிக்கியதால் பெண் ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டபோது பெண் ஒருவரின் புடவை சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அப்பகுதியையுடைய 56 வயதுடைய பெண் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.