யாழில் கைதான இருவர் ! வெளியான காரணம் !

யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று யாழ்.மாவட்ட ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசியதகவலினையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தம்வசம் வைத்திருந்த சுமார் 18 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 1000 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.