யாழில் வீடுடைத்து திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து ! பொலிஸாரிடம் ஒப்படைப்பு !

யாழில் வீடுடைத்து திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவமானது இன்று யாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டவர்கள் நேற்று புதன்கிழமை காலையில் வெளியில் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.

அதன்பின்னர் திருடனை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.