யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிறுவப்பட்ட கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இத்தகவலை இன்று (28-12-2022) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு பெப்ரவரி 04ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும், ஜனாதிபதியின் உத்தரவையடுத்து, இலங்கை சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழாவுடன் இணைந்து கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.