யாழ்ப்பாண பெண் எடுத்த முடிவால் கணவர் அதிரடியாக கைது! ஐரோப்பிய நாடொன்றில் நடந்த சம்பவம் !

ஜேர்மன் பெர்லினில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவனால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், பிளேடால் வயிறு மற்றும் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் சிறு குழந்தைகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது. மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவரது தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிஸாரின் விசாரணையில் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக பெண் கூறியதை அடுத்து கணவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேற்படி பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என அவரது நண்பர்கள் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.