யாழில் இடம்பெற்ற பதற்றமான சம்பவம் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டை வைரவர் ஆலயத்திற்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாள் வெட்டப்பட்ட இடத்திற்கு அருகில் இலக்குவனுடைய வீடு அமைந்துள்ளது.

இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே வந்து வீதியில் நின்ற போது முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த நபர் 1990 ஆம் இலக்க நோயாளர் காவு வண்டியில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.