மன்னாரில் யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!

மன்னார் – முசலி முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த கடற்படை சிப்பாய் போல் பித்திகம மெலியா பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி ரத்நாயக்க (வயது-41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலப்பத்துரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலப்பத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.