நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்ற மார்கழி திருவாதிரை உற்சவம் !

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது.

காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூஜை செய்யப்பட்டு 7.30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமான் கோயிலுக்குள் வலம் வந்து வெளி வீதி உலா வந்தார்.