அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடும்பன்குளம் பகுதியில் வயல் காத்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கவேலாயுதம்புரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சசிகரன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு களக்காவலுக்காக சென்றிருந்த வேளையில் இன்று அதிகாலை 2 மணியளவில் யானை தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.