மின்கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம்
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் திருத்தம் செய்ய முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை நேற்று (09) தமக்கு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுமார் 45 நாட்கள் ஆகும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.