பித்தத்தை நீக்கும் புதினா

புதினாவை சமையலில் சேர்த்தால் அதன் நறுமணம் உணவின் சுவையைக் கூட்டும். புதினா இலைகள் உடலின் பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

புதினா இலைகளை சுத்தம் செய்து இடித்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.

டீ தயாரிக்கும் போது ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளை டீ தூளுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

வெந்நீரைக் கொதிக்கும் போது புதினாவைச் சேர்த்துக் குடித்துவர பித்தத்தால் ஏற்படும் நோய்கள் குணமாகும்.

வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.

ஆவாரம் பூவை காயவைத்து பொடியாக்கி தேயிலை தூளுக்கு பதிலாக பயன்படுத்த சுவையான டீ கிடைக்கும், பித்தம், வாந்தி, உஷ்ணம் போன்ற நோய்கள் குணமாகும்.

பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு. சுக்கு, தனியா, கருப்பட்டி மூன்றையும் கலந்து காபி செய்து குடித்தால் பித்தம் போகும்.

அகத்திப்பூ பித்தத்தை நீக்க வல்லது. இது உடல் அழற்சியையும் போக்குகிறது. உணவில் பூ சேர்த்தாலே போதும்.