யாழில் நடு வீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர்!

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் துரத்தித் துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இளம் குடும்பஸ்தரான அஜித் (வயது 30) என்பவரோ இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனினும் குறித்த கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனினும் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.