ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹொரணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். சந்தேகநபர் பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆசிரியை மொரகஹேன, மில்லவ வீதியில் சென்று கொண்டிருந்த போது, லொறியில் பயணித்த சந்தேக நபர் வீதியை கடத்தி, ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியை 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மொரகஹேன பொலிஸ் நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த ஆசிரியைக்கும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருக்கும் இடையில் பணம் கொடுப்பது மற்றும் பெறுவது தொடர்பில் தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆசிரியை ஒருவரே ஹொரணை ஆதார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
.