யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தாலி கட்டிய மணமக்கள்!

யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர்.

திருநிறைச்செல்வன் விவேகானந்தா தமிழ்ஈசன் அவர்களும் திருநிறைச்செல்வி போசிந்தா அவர்களும் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். தமிழ்ஈசன் அவர்கள் தனியார் துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் சொல்வதோடு அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.