யாழில் போதைப் பொருளுடன் சிக்கிய மன்னர் வியாபாரி !

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 54 கிராம் ஹொகைன் போதைப்பொருளுடன் மன்னாரை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த போதே குறித்த வியாபாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய மாதங்களில் கைப்பற்றப்பட்ட மிகவும் பெறுமதியான போதைப்பொருள் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.