இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
தைப்பூச நாளான இன்று (05-02-2023) முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி முருகன் கோவிலில் திருமஞ்ச உற்சவம் நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூஜை நடத்தப்பட்டு, முருகப்பெருமான் சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.