தவறுதலாக மண்ணெண்ணெய் அருந்திய இரண்டு வயது ஆண் குழந்தை பலி !

மண்ணெண்ணெய் குடித்து இரண்டு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நிடம்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்து குழந்தை மண்ணெண்ணெய் குடித்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மண்ணெண்ணெய் குடித்த குழந்தை வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.