மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களின் பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அடுத்த வருடம் முதல் தரம் (6 )ஆறு முதல் தரம் (12) பன்னிரண்டு வரையான அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு பாடத்தை எட்டாம் தரத்தில் இருந்து கொண்டு வர கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவு பாடம் பாடத்திட்டத்தில் பிரதான பாடமாக சேர்க்கப்படும் தகவல் தொழிநுட்ப படங்களுடன் இதனையயும் இணைத்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

அத்தோடு கல்வியை டியிட்டல் மயமாக்கும் செயற்ப்பாட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதலினையும் பெறப்படவுள்ளது என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்