இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதியளிப்பது தொடர்பில் ஆலோசனை!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில் யோசனை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க புதுடெல்லி சென்று விரைவில் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகவும் அத்துடன் இலங்கைக்கு வருகை தந்த இந்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் இலங்கை மற்றும் இந்திய நாட்டு மீன் பிடி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியுள்ளார்.