பொலிஸ் கான்ஸ்டபிளை அறைந்த பெண்!

மோட்டர் சைக்கிளில் தலைகவசம் அணியாமல் சென்ற பெண்ணை பொலிசார் வழியில் மறித்த வேளை குறித்த பெண் ஜாஎல காவல்துறை போக்குவரத்து அதிகாரிக்கு காதில் அறைந்தது மட்டுமல்லாமல் தனது ,மோட்டர் சைக்கிளினையும் வீதியிலே விட்டு சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜாஎல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகமையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே குறித்த சம்பவத்திற்கு ஆளாகியுள்ளார்

குறித்த பெண்ணை காவல் துறையினருக்கு பயப்படாத பெண் நில் என்று கூறி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளின் காதில் அடித்துள்ளார். குறித்த பெண் வீதியில் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளினை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பெண்  சீதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது