தேர்தல் குறித்து நிதி அமைச்சிடம் அரசு விடுத்துள்ள கோரிக்கை!

பொது மக்களின் வாக்குரிமையை சரியாக பாதுகாக்கும் வகையில் தேர்தலுக்கு தேவையான நிதியினை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனை மேற்க்கொள்ளுமாறு அரசு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எந்தவொரு தேர்தலிலும் எதிர்கொள்ளாத பொருளாதார நெருக்கடி இம் முறை ஏற்ப்பட்டுள்ளமையினால் தேர்தலுக்கான நிதியை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது

இந் நிலையில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்குமாறு  விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தலை நடாத்துவதற்கு அரசு முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்