உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்  22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறாது எனவும் தபால் மூல வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்க்கான உத்தியேகபூர்வ திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது அரச அச்சகத்தினால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையினாலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது