யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் !

யாழில் இடம்பெற்று வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

இச்சம்பவமானது நேற்று யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் கோயிலுக்கு பின் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவமானது இரு கட்சி தரப்பினர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் தடயவியல்பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.