இலங்கை அரச சேவையில் ஆட்கள் பற்றாகுறை

இலங்கை தபால் திணைக்களத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்ப்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை பிரதித் தபால்மா அதிபர்  ராஜித ரணசிங்ஹ கூறியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் தற்போது அரச சேவையில் ஆட்களை இணைத்துக் கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது ஆகையால் அத்தியாவசிய சேவைக்காக அரச சேவையில் உள்ளவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 218 பேருக்கு பதவிஉயர்வு வழங்கி அவர்களுக்கான பயிற்சி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும் உள்ளக ரீதியில் நடாத்தபட்ட போட்டிப் பரீட்சைக்கு அமைவாக அவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது