இலங்கையில் நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

நாட்டில் வெற்றிடமாக உள்ள நான்காயிரத்து எண்ணூறு அதிபர் பதவிகளை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ் அதிபர் பதவிக்காக இதுவரை  சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்ததாகவும் அவர்களுக்கான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதால் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.