எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை இந்த தேதியில் இருந்து நீக்கம் !

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR முறையானது எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.