யாழில் கடற்றொழிலாளரின் வாடிக்கு தீ வைத்த விஷமிகள் !

யாழ். குடாநாட்டில் உள்ள மீன் பண்ணை ஒன்று விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவைச் சேர்ந்த பாக்யநாதர் எசுவியரின்என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதன் போது வாடிக்குள் இருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரின் ஆசனம் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.