நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு கொடிய நோய் தொற்று குறித்து எச்சரிக்கை விடுப்பு!

நாட்டின் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக யானைக்கால் நோயை கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில்  இந்த நோய் பரவி வருகின்றது கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம்  400 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சைகள் அளிப்பதற்காக இரத்த பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன ஆகவே வீட்டிற்கு வரும் சுகாதார அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ள வரும் சுகாதார அதிகாரிகள் தமது உத்தியேகபூர்வ சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் வருவார்கள் ஆகவே மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மேலும் 2030ஆம் ஆண்டு அளவில் இந் நோயினை முற்றாக ஒழிப்பதே நோக்கமாகும்