இலங்கையில் அறிமுகமாக இருக்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

இலங்கையில் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன குறிப்பாக இது  முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் ஆகவே அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகின்றது

இந்த செயலியை பொலிசார் கண்காணிப்பார்கள் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளூர் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை வழங்குவதற்காகவே இந்த மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணம் செலுத்தும் முறையும் இந்த செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி மார்ச் முதல் வாரத்தில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்