யாழில் வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம் ! இனந்தெரியாத நபர்களால் வந்த வினை !

பருத்திதுறை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இத்தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவிலும் எரிந்து சேதமானது.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தை நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக பெருந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்.. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.