யாழில் கைதான பெண் உட்பட இருவர் ! வெளியான காரணம் !

யாழில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று காலை யாழ்.புத்தூர் நவக்கிரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இக்கைது சம்பவத்தில் 28 பெண் ஒருவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 157 கிராம் கஞ்சாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.