அதிக வெப்பத்தினால் பாடசாலை சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுவாசக் கோளாறுகள்

பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளில் சிறுவர்கள் இருப்பதனால் வெப்பத்துடன் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.