மாணவனை காலால் உதைத்த உப அதிபர்

   பாடசாலை உப அதிபர் மாணவனை காலால் உதைத்த சம்பவம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் “அபயம்” அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த உப அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.