வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு நிவாரணம்

 வெளிநாடுகளில் பணி புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வு வரி நிவாரணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண அதிகரிப்பானது மே மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இத்தகவலை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அமைச்சரவை அங்கீகாரம்

அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை கூறினார்.

தற்போது விமான நிலையத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலதிக விசேட சலுகைகளை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்த நிலையில் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.