நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாகனம்

நாட்டில் 7 பேர் பயணம் செய்யும் வகையில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியில் பயணிக்க 150 ரூபா அளவு மாத்திரமே செலவாகும் என அதன் உரிமையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாகனத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.