கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே  இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் இந்த  துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில்  வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த   இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.

மேலும் இளைஞர் உயிரிழந்த  சம்பவம் தொடர்பாக  கனடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.