பெற்ற மகளை விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை!

  சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய  பாசடாலைக்கு செல்லும் பதின்ம வயது மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

  16 வயதான மகள்  விற்கப்பட்டமை தொடர்பில்  அகலவத்த பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி துஸ்பிரயோகம்

சிறுமிக்கு அலைபேசியையும்  முதலாளி வாங்கிக் கொடுத்த நிலையில்  ,  அந்த அலைபேசி சின்னமாவின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமானது.

அதேவேளை  சிறுமி, தன்னுடைய மாமாவினால் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, செவ்வாய்க்கிழமை (30) மாலை கைதான நிலையில்  வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும் மாமாவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

தந்தையின் மோசமான நடவடிக்கை

இரண்டு பிள்ளைகளின் தாயும்,தந்தையும், தன்னுடைய வீட்டுக்குள்ளேயே பல வருடங்களாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சூதாட்டத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியான கலவானையைச் சேர்ந்த 38 வயதானவர், அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, சூதாடுவதற்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியிடம் பெற்ற பணத்துக்காக தன்னுடைய மகளையே பாலியல் தேவைக்கு   அனுப்பிவைத்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.