காலி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இச் சடலம் கராபிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.