அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதால் நபர் ஒருவர் உயிரிழப்பு!

ஆடை தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதில் நபர் உயிரிழப்பு.

இதில் இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வஸ்கடுவ பொக்குணவத்தை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர்

இவர் அச்சு இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயந்திரம் திடீரென இயங்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.