மட்டக்களப்பில் தந்தையின் தாகம் தீர்க்க முயன்ற மகனுக்கு நேர்ந்த சோகம் ! கதறும் குடும்பத்தினர் !

மட்டக்களப்பு – சித்தாண்டியில் தந்தையின் தாகம் தீர்க்க இளநீர் பறிக்க தென்னைமரத்தில் ஏறிய மகன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள தனது உறவினர் ஒருவரது மரக்கறி விற்பனை நிலையத்தில் தொழில் நிமிர்த்தம் நின்ற வேளை கடந்த (09.06.2023) ம் திகதி மதிய நேரம் தனது தந்தைக்கு உடற்சோர்வு மற்றும் களைப்பாக இருந்ததால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக ஏறிய போது தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்துளார்.

கீழேவிழுந்து உணர்விழந்த நிலையில், மகனை உடனடியாக மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் (11/06/2023) நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய விஜயகுமார் தனுஷன் என்ற இளைஞன் ஆவார். சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் சடலத்தை பார்வையிட்ட துடன், உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை முடிவில் தலையும் கழுத்தும் பலமாக அடிபட்டு மூளை வீக்கமடைந்துள்ளதாகவும் இரத்தக்கசிவும் ஏற்பட்டதால் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தந்தையின் களைப்போக்கமுயன்ற மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.