தோஷம் கழிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

லக்கல – ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் இடம்பெற்ற தோஷம் கழிக்கும் பூஜையின் போது சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரு பெண்களுக்கும் ஆண் ஒருவருக்கும் ஏற்கனவே உள்ள நோய்களை குணப்படுத்துவதற்காக இந்த தோஷம் கழிக்கும் பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தோஷம் கழிக்கும் பூஜையின் போது அவர்களுக்கு 21 ஆரஞ்சு பழங்கள் வழங்கப்பட்டதாகவும், அப்போது ஒரு பெண் நோய்வாய்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, ​​ தோஷம் கழிக்கும் பூஜை செய்தவர்கள் மஞ்சள் தண்ணீரை குடிக்க கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் நிலை மோசமடைந்து தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.